தினந்தினமும் ஒளி புதிது
ஒளி தொடும் யாவும் புதிது
யாவும் செய்யும் செயல் புதிது
செயல் முடிவில் மரணம் புதிது
மரணம் தரும் ஜனனம் புதிது
நாளும் பொழுதும் யாதும் புதிது
புதிதினும் புதிதாய்
பூத்துக்கொண்டிருப்பது பிரபஞ்சம்...
தினந்தினமும் ஒளி புதிது
ஒளி தொடும் யாவும் புதிது
யாவும் செய்யும் செயல் புதிது
செயல் முடிவில் மரணம் புதிது
மரணம் தரும் ஜனனம் புதிது
நாளும் பொழுதும் யாதும் புதிது
புதிதினும் புதிதாய்
பூத்துக்கொண்டிருப்பது பிரபஞ்சம்...
யாரிடமும் கேட்காமல்
நான் நானாக வளர்ந்திட வேண்டும்
யாரிடமும் கேட்காமல்
ஒரு விதை
ஒரு புல்
யாரிடமும் கேட்பதில்லை
யாரிடமும் கேட்காமல்
நான் நானாக வளர்ந்திட வேண்டும்
யாரிடமும் கேட்காமல்
அது எதிப்பு இல்லை
அது பிடிக்காமல் இல்லை
யாரிடமும் மறுப்பது இல்லை
யாரிடமும் கேட்காமல்
நான் நானாக வளர்ந்திட வேண்டும்
யாரிடமும் கேட்காமல்...
26/12/1925
மகத்தான பொதுவுடைமைக் கட்சியும்
உவப்பான பொதுவுடைமைவாதியும்
இந்திய மண்ணில் மலர்ந்த நாள்
நல்லகண்ணு
இந்திய பொதுவுடமைக் கட்சியின்
முகாந்திரம்
ஸ்ரீவைகுண்டப் பிறப்பு
ஜனசக்தி வளர்ப்பு
மடம் எதிர்ப்பு
மடமை ஒழிப்பு
இளவயதிலேயே இருண்ட சிறையடைப்பு
மக்கள் பணியே
இந்த மகேசனின் பணி
சதமடித்தும் சரணடையா செங்கொடி நீ
விவசாயத் தொழிலாளர் நலம் காண
பொதுவுடைமை சித்தாந்தம் வழி காண
ஏராளம் ஏராளம் போராட்டக் களம் காண
அயராது அயராது உழைத்தவன் நீ
ஆகாயம் தீண்டிட நீண்டிடும் தீ
நல்லகண்ணு இருந்தும் கூட
பார்வை கோளாறு தான்
நம்மிடம்...
தாம்பரம் நேஷனல் தியேட்டரில் நேற்று மாலை 6.30 காட்சி பார்த்தேன். மொத்தமாகவே 50க்கும் குறைவான பார்வையாளர்கள் தான் இருந்தார்கள். இரண்டாம் விடுதலையும் நமக்கு வீணாகித்தான் போனது. வெற்றிமாறன் மற்றும் குழுவினர்களின் மொத்த உழைப்பும் இப்படி பார்ப்பாரின்றி இருக்கிறதே?
"உலகத் தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள் " என்றார் கார்ல் மார்க்ஸ்
குறைந்தபட்சம் தமிழகத் தொழிலாளிர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மொத்தமும் ஒன்றிணைந்து பார்த்துப் படிக்க வேண்டிய பாடம் விடுதலை 2.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் இவர்களுக்கெல்லாம் கிடைக்காத அரிய கதாப்பாத்திரம் விஜய் சேதுபதி அவர்களுக்கு கிடைத்தது அவரின் பாக்கியம். படம் முடிந்தும் பாடம் எடுக்கிறார் வாத்தியார்.
இளையராஜாவின் எத்தனையோ இசை மனதைத் தொட்டிருக்கும், எத்தனையோ இசை இதயத்தைத் தொட்டிருக்கும், கம்யூனிஸ சித்தாந்தத்தில் உன் ஸ்ருதி சேரும் போது உயிரைத் தொட்டுவிட்டது ஐயா. இது பல கோடி ஆஸ்காருக்கும் மேலானது.
மகாலட்சுமியின்(மஞ்சு வாரியார்) கடைசி வசனங்கள் அனைவரையும் உட்கார வைத்துக் கேள்வி கேட்டு, கூனிக் குறுக வைக்கிறது.
பார்வையாளர்களின் மனசாட்சி தான் குமரேசன்(சூரி) . படத்தின் முடிவில் சுயநலங்களில் இருந்து மேலெழுந்து ஒருகணம் பொதுநலம் யோசித்து சற்றே தனித்துச் செல்கிறது மனசாட்சி.
ஆம் இதற்கு படம் பார்த்த நானும் ஒரு சாட்சி.
மொத்தப் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள். படத்தை பார்க்க வேண்டும் என தமிழகத் தொழிலாளிகளுக்குக் கோரிக்கைகள்.
"கடைசி விவசாயி"யைத்தான் விட்டுவிட்டோம்.
இந்த "விடுதலை 2" போராளிக்காவது தோள் கொடுப்போம் தோழர்களே...
ரொட்டியை பகிர்ந்தளித்தவன்
என் நண்பன்
என் இயேசு...
எனது துன்பங்களைச் சொல்லி
அவனைச் சிலுவையில் அறைவேன்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவான்
நட்புக்காக...
கடலில் கொல்கிறேன்
தரையில் வளர்க்கிறேன்
இப்படியே இப்படியே
இரண்டாக இருந்து
வானில் ஒன்றாகப் பார்க்கும்
நான் மூன்றா
முற்றிலாததா...
தோல் தானே
நிச்சயம் உணர்ந்திருக்கும்
உன் பிரிவை
உன் தபேலா
எப்படி மறக்கும்
அந்த உன்னத உறவை
தழுவித் தழுவியே
அதை நீ வசப்படுத்தி வைத்திருந்தாய்
எப்படி மறக்கும்
உன் தபேலா
உன் அத்தனைத் தொடுதலை...
கடலின் அலைகள்
மரத்தின் இலைகள்
பறவையின் சிறகுகள்
தீயின் சுடர்கள்
மழையின் துளிகள்
அனைத்திலும் கேட்போம்
உந்தன் விரல்களின் தாளம்...
உன் இதய தாளம்
ஆதி தாளத்துடன்
இணைய வேண்டுகிறோம்
சூப்பர் ஸ்டார்
(எழுபதிலிருந்து எழுபதுவரை)
பெல்பாட்டம்
பேகி, பலூன் பேகி
நாலஞ்சு ஃபிளிட்டு
கலர் கலரா பெல்ட்டு
பட்டாம்பூச்சி சர்ட்டு
பாக்ஸ் வச்ச சர்ட்டு
கைமடிச்ச சர்ட்டு
காலரில்லா டீசர்ட்டு
ஆறு பாக்கெட் கால் சர்ட்டு
கறுப்பு சர்ட்டுக்கு
கறுப்பு கால் சர்ட்டு
வெள்ளைக்கு வெள்ளை
சிவப்புக்கு மஞ்சள்
இன்னும் இன்னும் விதவிதமா
ஒவ்வொன்றும் புதுவிதமா
சூப்பர் ஸ்டார் ஸ்டைல்
சூப்பர் ஸ்டார் ஷூ
சூப்பர் ஸ்டார் கண்ணாடி
சூப்பர் ஸ்டார் காலமது
எழுபதிலிருந்து எழுபதுவரை
என்பது, தொன்னூறு
இன்னும் இன்னும்
நூறு அடிப்பாரு
எங்கள் சூப்பர் ஸ்டாரு
பல தீபாவளி பொங்கல் எல்லாம்
ரஜினி நடை
ரஜினி உடை
அதுதான் எங்கள் திருவிழா
கண் அசச்சா
வாய் அசச்சா
ஸ்டைல்
தலை அசச்சா
தல முடி அசச்சா
ஸ்டைல்
கை அசச்சா
கைவிரல் அசச்சா
ஸ்டைல்
கால் மேல
கால் போட்ட
ஒரிஜினல் புஸ்பா
தாதா னாலே
கறுப்பு வேட்டி
கறுப்பு ஜிப்பா
அன்று ஜேடிபி
இன்று காலா
வரைக்கும் தொடருதப்பா...
சகலகலா வல்லவன்
உழவன் மகன்
முதல்வன் வில்லன்
எல்லோருக்கும் நல்ல நண்பன்
எங்கள் சூப்பர் ஸ்டார்
கலகலன்னு சிரிப்பார்
கடவுளாக சிரிப்பார்
கண்ணடிச்சு சிரிப்பார்
கண்கலங்க சிரிப்பார்
சுண்டு விரல் கடிச்சு சிரிப்பார்
தவறைச் சுட்டிக் காட்டி சிரிப்பார்
குருவை போல சிரிப்பார்
குழந்தை போல சிரிப்பார்
எங்கள் சூப்பர் ஸ்டார்
பார்க்காமலே அடிப்பார்
பறந்து பறந்து அடிப்பார்
பக்கவாட்டில் அடிப்பார்
பந்தாவாக அடிப்பார்
தலைகோதி அடிப்பார்
தர்மத்துக்கு அடிப்பார்
எங்கள் சூப்பர் ஸ்டார்
எளியோரை அணைப்பார்
எளிமையாக இருப்பார்
வீண் சண்டைக்குப் போகமாட்டார்
வந்த சண்டையை விடவும் மாட்டார்
அண்ணையை மதிப்பார்
தந்தையை ஜெயிப்பார்
அண்ணனைப் போற்றுவார்
தம்பித் தங்கையை வளர்ப்பார்
குழந்தைகளை நேசிப்பார்
பெரியோரை வணங்குவார்
மனைவியை மதிப்பார்
கடவுளை நம்புவார்
நண்பர்களை விட்டுத்தர மட்டார்
எதிரியையும் அணைப்பார்
துரோகியை மன்னிப்பார்
என்றே பற்பல
நற்பண்புகளை குணநலன்களை
நடிப்பால் வளர்த்தார்
எங்கள் சூப்பர் ஸ்டார்
உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்கமாட்டார்
உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிடமாட்டார்
எப்போதும் எப்போதும் ஜொலிப்பார்
எங்கள் சூப்பர் ஸ்டார்
மம்மி
அம்மா
என்றெல்லாம் அழைத்ததில்லை
மா...
என்றே கூப்பிட்டுப் பழக்கம்
ஊருக்கு வேண்டுமானால்
அது வார்த்தைக் குறைவு
நம் உறவுக்கு
அதுதானே என்றென்றும் வலுவு...
மா... என்பேன்
அது ஒற்றைச் சொல்தான் எனினும்
என் ஒட்டுமொத்த உயிருக்கும்
தனக்குத்தானே ஓதும் மந்திரம்...
அந்தப் பேரதிர்வில்
என் ஒவ்வொரு செல்களும்
நடனம் ஆடும்
அந்த ஒரு சொல் மந்திரம்
என்னுள் எதிரொலித்து எதிரொலித்து
நெஞ்சம் பாடல் பாடும்
என் கோவில்
என் சாமி
எல்லாமே
என் மா... அம்மா...
கண்ணப்பா தாத்தாவின் அன்பு மனைவி
ஐந்து பிள்ளைகளை உழைத்து வளர்த்த
பொறுப்புமிகு குடும்பத் தலைவி
என் அன்னைக்குச் சித்தி
பேரன் என்னை அனைத்து
நெற்றியில் தருவாள் செல்ல முத்தி
அன்பும் ஆசியும்
பாசமும் நேசமும்
கூடி வாழும் குணமும்
தோள் கொடுக்கும் தோழமையும்
நிறைந்த சிறிய வீடு
ஆயிரம் விளக்கில்
மறக்க முடியாத
மார்டன் ஸ்கூல் ரோடு...
தாரா சித்தாவின் ஆன்மா சாந்தி அடைய இயற்கையை வேண்டுவோம்
நேரமில்லை
எனும் வார்த்தை
உண்மையில்லை
நேரம் கொட்டிக் கிடக்கிறது
நேரத்தில் தான்
எவரும் இல்லை...
நேரமில்லை
என நானும் இருந்தால்
நேரம் சொல்வார் சந்திப்பதற்கு
நேரம் இல்லாத
என் வித்தையை அறிவதற்கு
நேரம் தருவார் நேரமில்லாதவர்
சிரிப்பை தவிர வேறு வித்தை
ஏதுமில்லை என்றுணர்த்த மறுகணமே
வீண் என்று கைக்கடிகாரம் பார்த்து
சொல்லாமல் சொல்வான்
ஏதும் சொல்லாமலே செல்வான்
இது வித்தை காட்டும் தருணம்
அவன் அடிக்கும் குட்டிக்கரணம்...
நேரம் இல்லாதவன்
தன்னைத்தானே தூக்கி அலையும்
பிணம் அன்றி வேறில்லை
நேரம் கொட்டிக் கிடக்கிறது
நேரத்தில் தான்
எவரும் இல்லை...