26/12/1925
மகத்தான பொதுவுடைமைக் கட்சியும்
உவப்பான பொதுவுடைமைவாதியும்
இந்திய மண்ணில் மலர்ந்த நாள்
நல்லகண்ணு
இந்திய பொதுவுடமைக் கட்சியின்
முகாந்திரம்
ஸ்ரீவைகுண்டப் பிறப்பு
ஜனசக்தி வளர்ப்பு
மடம் எதிர்ப்பு
மடமை ஒழிப்பு
இளவயதிலேயே இருண்ட சிறையடைப்பு
மக்கள் பணியே
இந்த மகேசனின் பணி
சதமடித்தும் சரணடையா செங்கொடி நீ
விவசாயத் தொழிலாளர் நலம் காண
பொதுவுடைமை சித்தாந்தம் வழி காண
ஏராளம் ஏராளம் போராட்டக் களம் காண
அயராது அயராது உழைத்தவன் நீ
ஆகாயம் தீண்டிட நீண்டிடும் தீ
நல்லகண்ணு இருந்தும் கூட
பார்வை கோளாறு தான்
நம்மிடம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக