ஞாயிறு, 15 டிசம்பர், 2024

"உஸ்தாத் ஜாகிர் உசைன்"


தோல் தானே

நிச்சயம் உணர்ந்திருக்கும்

உன் பிரிவை

உன் தபேலா


எப்படி மறக்கும்

அந்த உன்னத உறவை

தழுவித் தழுவியே

அதை நீ வசப்படுத்தி வைத்திருந்தாய்


எப்படி மறக்கும்

உன் தபேலா

உன் அத்தனைத் தொடுதலை... 


கடலின் அலைகள்

மரத்தின் இலைகள்

பறவையின் சிறகுகள்

தீயின் சுடர்கள்

மழையின் துளிகள்

அனைத்திலும் கேட்போம்

உந்தன் விரல்களின் தாளம்... 


உன் இதய தாளம் 

ஆதி தாளத்துடன் 

இணைய வேண்டுகிறோம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக