ஞாயிறு, 1 டிசம்பர், 2024


மம்மி

அம்மா

என்றெல்லாம் அழைத்ததில்லை

மா... 

என்றே கூப்பிட்டுப் பழக்கம்

ஊருக்கு வேண்டுமானால்

அது வார்த்தைக் குறைவு

நம் உறவுக்கு

அதுதானே என்றென்றும் வலுவு... 


மா... என்பேன்

அது ஒற்றைச் சொல்தான் எனினும்

என் ஒட்டுமொத்த உயிருக்கும்

தனக்குத்தானே ஓதும் மந்திரம்... 


அந்தப் பேரதிர்வில்

என் ஒவ்வொரு செல்களும்

நடனம் ஆடும்


அந்த ஒரு சொல் மந்திரம்

என்னுள் எதிரொலித்து எதிரொலித்து

நெஞ்சம் பாடல் பாடும்


என் கோவில்

என் சாமி

எல்லாமே

என் மா... அம்மா... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக