கண்ணப்பா தாத்தாவின் அன்பு மனைவி
ஐந்து பிள்ளைகளை உழைத்து வளர்த்த
பொறுப்புமிகு குடும்பத் தலைவி
என் அன்னைக்குச் சித்தி
பேரன் என்னை அனைத்து
நெற்றியில் தருவாள் செல்ல முத்தி
அன்பும் ஆசியும்
பாசமும் நேசமும்
கூடி வாழும் குணமும்
தோள் கொடுக்கும் தோழமையும்
நிறைந்த சிறிய வீடு
ஆயிரம் விளக்கில்
மறக்க முடியாத
மார்டன் ஸ்கூல் ரோடு...
தாரா சித்தாவின் ஆன்மா சாந்தி அடைய இயற்கையை வேண்டுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக