திறந்த கூண்டிலிருந்து
திறந்த வாழ்விலிருந்து
நானும் ஒரு பறவையும்
காலத்திலிருந்து விலகி
ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்டோம்
மீண்டும் கூண்டிலும்
மீண்டும் வாழ்விலும்
நானும் பறவையும்
காலத்தில் நுழைந்து
கதவைக் கதவைப்
பூட்டிக்கொண்டோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக