நினைவுப் புல் கட்டுடன்
இரவெல்லாம் நடந்துச் செல்கிறாள்
தின்ன முடியாது எனினும்
பின்தொடரும் இந்த ஆடு...
அதிகாலைக் கனவுகளில்
பால் புகட்டி உறங்க வைப்பாள்
இரவெல்லாம் பசி தாங்கிப்
பின் நடக்கத் தெம்பளிப்பாள்...
பகலைக் கால் கடக்க தினம்
கருணைக் கொலைச் செய்கிறாள்
தனி ஒருத்தியாய்ப் பாடையில்
தூக்கி அலைகிறாள்
எரிக்கவும் முடியாமல் புதைக்கவும் முடியாமல்
பாவம் சுற்றித் திரிகிறாள்
நினைவுப் புல் கட்டைக் காட்டியே
என்னை இரவில் உயிர்க்கிறாள்...
இரவெல்லாம் நடந்துச் செல்கிறாள்
தின்ன முடியாது எனினும்
பின்தொடரும் இந்த ஆடு...
அதிகாலைக் கனவுகளில்
பால் புகட்டி உறங்க வைப்பாள்
இரவெல்லாம் பசி தாங்கிப்
பின் நடக்கத் தெம்பளிப்பாள்...
பகலைக் கால் கடக்க தினம்
கருணைக் கொலைச் செய்கிறாள்
தனி ஒருத்தியாய்ப் பாடையில்
தூக்கி அலைகிறாள்
எரிக்கவும் முடியாமல் புதைக்கவும் முடியாமல்
பாவம் சுற்றித் திரிகிறாள்
நினைவுப் புல் கட்டைக் காட்டியே
என்னை இரவில் உயிர்க்கிறாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக