செவ்வாய், 31 டிசம்பர், 2019

ஒரு தாவரத்தின் முகம்
அது பூவாகத்தான் இருக்கும்
சிரிக்கிறதே...

ஒரு தலை இராமனும்
பல தலைகளோடு இராவணனும்
சீதையும் பாஞ்சாலியும்
அதில் உண்டு

மனிதர்களைப் போன்றே
அவற்றுக்கும் காவியங்கள் உண்டு

வெள்ளை உள்ளம் கொண்டவைகள்
வெண் எழுத்தால் எழுதியதை
வெள்ளைக் காகிதங்கள் என்றெண்ணி
நம் காவியங்கள் நிரப்புகிறோம்

எதை எழுதிப் படித்தாலும்
வெட்டுகின்ற மனம் வளர்த்தோம்
புத்தகத்தின் வாசகம் தாண்டி
புத்தகத்தின் வாசமும் படிப்போம்...

பூக்களின் மேல் காதல் வரும்
வெட்டும் எண்ணம் விட்டுவிடும்
பாலைகள் எல்லாம் சோலையாகும்
காதல் ஒன்றே வேலையாகும்

இதழ்களில் எழுதத் தொடங்கிவிட்டால்
காகிதம் காவியம் மாயமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக