புதன், 25 டிசம்பர், 2019

சிலுவையில் அறையப்பட்டும்
பட்டாம்பூச்சி
சிரித்துக்கொண்டே இருக்கிறது
இரண்டாயிரம் ஆண்டுகளாக...

பாவமன்னிப்பு
கதைகள் எல்லாம்
நகைச்சுவையானதோ

மலரினைப் படைத்ததும்
அதில் தேனினை மறைத்ததும்
தேனீக்கள் தேடுவதும்

உன் கதையை
உன்னிடமே சொல்வோம்
தன் கதையாக

உன் நடன பாவம்
தன்னுடையதாய் நினைப்பது தான்
நிழல்களின் பாவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக