செவ்வாய், 17 டிசம்பர், 2019

சிறுவன்
கன்னத்தில் அறைந்தான்
உண்மையை உணர
அது தான் தருணம் எனில்
வரத்தை ஏன் மறுப்போம்
பணிந்து ஏற்றுக்கொண்டேன்
துணிந்து ஓட்டம் கண்டேன்
புதிய பாதையிலே
புதிய பார்வையிலே
பயணம் தொடர்கிறது...

வருத்தம் இப்போதும் உள்ளது
அந்த சிறுவன் மட்டும்
அங்கேயே உள்ளது

அவனைவிட
சிறியவனோ பெரியவனோ
அவனுக்கும் ஒரு வரம்
வேண்டுகிறேன்
அவனுக்கும் ஒரு
புதிய பாதை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக