தந்தை போடும் கோடுகள் கூட
நாம் தாண்டிப் பழகத்தான்
என்றேத் தாண்டினேன்
பழகினேன்
பாழாய்ப் போனேன்
பழகுகிறேன்
பாழாய்ப் போகிறேன்
பரவாயில்லை
மனம் வரையும் ஓவியத்தை
ரசித்தே பழகுகிறேன்
பழகியதால்
இறைவன் போடும் கோடுகளையும்
இயல்பாய்க் கடக்கிறேன்...
அவ்வை சொன்ன வார்த்தைகளை
நான் மறவேன்
"பாழாகாமல் ஆயுதங்கள்
பார்வென்றக் கதைகளில்லை"
பால் ஒழுகும்
முகத்தில் மட்டுமல்ல
பாழான முகங்களிலும்
குழந்தை உண்டு
ஆழ்ந்து பார்த்தால்
அழகு உண்டு
மேலாகப் பார்த்தால்
மறத்தல் நன்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக