வியாழன், 12 டிசம்பர், 2019

தினமும்
வந்தென்னை செதுக்குகிறாள்
உயிரை
உறிஞ்சியே மயக்குகிறாள்

காற்றினில்
அசையும் சிற்ப்பங்களாய்
முத்தங்களில்
தினம் வார்த்தெடுப்பாள்

கண்களிலே
போர்த் தொடுப்பாள்
தோல்விக்கு
கனிகளைப் பரிசளிப்பாள்

கண் மூடிடும்
கணத்தினில் மறைந்திடுவாள்
துடித்திடும்
மனதிற்குத் தீயிடுவாள்

நீ திரும்பிடும் வரையில்
தகித்து இருப்பேன்
கண் மூடி உள்ளாக
விழித்து இருப்பேன்

உன் கால் தடத்தில்
முகம் புதைத்து
மண்ணில் புதையும்வரை
காத்திருப்பேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக