வெள்ளி, 20 டிசம்பர், 2019

சைதாப்பேட்டை மான் சுதாகர்

அரசு பண்ணைபுரத்து ராஜாவே
அன்புத் தோட்டத்தின் ரோஜாவே
எனக்கு தெரிந்த அண்ணன்தான்
மான்களுக்கு நீ கண்ணன்தான்

விரல்கள் கூப்பி இசைக்கின்றாய்
பசி ஆறச் செய்கின்றாய்
புள்ளி மான்கள் மனதினிலே
பெரும் புள்ளி ஆகிவிட்டாய்

பெண் மான்கள் நடந்துவர
நானும் கூட இசைத்ததுண்டு
என் பசிக்கு நானிசைத்தேன்
நானும் சைதை புள்ளி(ங்கோ)

பெரும்புள்ளி உன் முன்னே
நான் சிறும்புள்ளி ஆனேனே
மாகோலம் போடும் இறைவாநீ
வரையும் ஓவியம்தான் என்னவோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக