செவ்வாய், 24 டிசம்பர், 2019

அருகில் சந்திக்காதவள்
கண்கள் நிறைகின்றாள்
சிந்தை கலைக்கின்றாள்
விந்தை செய்கின்றாள்

தினம் ரசிக்க வைத்து
விலகிச் செல்லும் நிலவு
வானுக்குச் சொந்தம் நீ
எதற்காக இந்தக் கலவு

என் மனதைக் காணவில்லை
யாரிடம் சொல்வேன்
ஏறி வரப் பாதையில்லை
ஏக்கம் கொண்டு நின்றேன்

சென்ற தடத்தைத் தேடி
இங்கும் அங்கும் ஓடி
என்னைக் கடக்கும் தேதி
நினைவு மட்டுமே மீதி

நினைவைப் பிடித்துக் கொண்டே
இமயம் ஏறி விட்டேன்
இன்னும் கூட தொலைவு
இமியும் குறையவில்லை ஏனோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக