ஞாயிறு, 1 டிசம்பர், 2019

என் தேவதை

மலர் கொடுத்தாள்
வரம் கொடுத்தாள்
முகத்தை மட்டும்
மறைத்துக் கொண்டாள்

தள்ளி நின்றாள்
தாகம் தந்தாள்
கானல் நீர் அனுப்பி
ஏங்க வைத்தாள்

கெஞ்சுகின்றேன்
கொஞ்சுகின்றேன்
மறைந்துக்கொண்ட மலர்களுக்கு
முத்தம் தந்தேன்

அவள் தான்
இரங்கவில்லை
பூக்கள் ஆவது
இறங்கட்டுமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக