திங்கள், 31 ஆகஸ்ட், 2020

 


விண்ணில் விதைக்கும் விதைகள் எல்லாம்

விண்மீன்களாய் வளர்ந்து

சிந்தைக்கு உணவாகின...


உயர்ந்த இடத்திலே கம்யூனிசம்

சந்தைக்கு வராதவரை

விண்மீன்கள் பொதுவுடைமை


மண்ணையும் மேம்படுத்த

பொதுவாய் அதில் விதை விதைப்போம்

வேறெதுவும் இல்லை கம்யூனிசம்


பசி ஆரிய பின்

பறிக்கப் போகும் கைகளைத் தான்

சுத்தியும் கத்தியும் தடுக்கிறது


அந்தோ பரிதாபம்

இங்கு பறிக்கும் கைகளே

ஓங்கி இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக