சிறகுகள் ஓய்ந்ததும்
சில பயணங்கள் தொடர்கின்றன...
உடலை விட்டுவிட்டு
உயிர் மட்டும் பறக்கிறது
உறவுகளின் கண்ணீரைப் படித்தும்
இறங்கி வர மறுக்கிறது...
உடலாக இருக்கும் வரைதானே தூரங்கள்
உலகோடு மட்டுமல்ல
உறவோடும் கலந்திருப்பாய்
அந்த கடைசி துளி கண்ணீரையும்
நீதான் துடைத்திருப்பாய்...
மரணம் என்னும் மறுவாழ்வு
மூன்றாம் நாளிலே உயிர்த்தெழும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக