வண்ணங்கள் ஏழு பரிசளித்தேன்
ஏனோ எனக்கு தெரியவில்லை
அனுப்பியதும் அதன் உருவிலில்லை
வானவில்லை வளைத்து உடைத்து
சீதைக் கவிதையை ஏந்தினாயோ
வார்த்தைகளாய் உருக வைத்து
எவர் நெஞ்சில் பாய்ச்சினாயோ...
நீங்கள் பார்ப்பதை எல்லாம்
எங்களுக்குச் சமைத்து விருந்திடுவாய்
இயற்கை மருத்துவன் நீ
எட்ட நின்றே மருந்திடுவாய்
அதில் பிழைத்த பறவையொன்று
நீ பிறந்த தினத்திலின்று
தன் சிறகைச் சொடுக்கியது
அன்பு உன்னிடம் சேர்ந்திடுமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக