நான் வரைந்த ஓவியத்தில்
இன்று
நதியைக் காணவில்லை
பல தென்னைகளும் இல்லை
என்னைப் போலவே
தேட நினைக்கும் மேகங்கள்
செயலற்றுக் கிடக்கிறது
எழுகிறதா
விழுகிறதா
வண்ணங்கள் இல்லாத விண்மீன்
இன்னும் குழப்பமாகவே இருக்கிறது...
எல்லா விடைகளும்
மறைந்தே இருக்கிறது
மலைக்குப் பின்னால்...
கருப்பு வெள்ளை
நாள்தோறும்
தேடி அலைகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக