வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

 



சிலநாள் வாழும் வண்ணத்துப் பூச்சியின்
பலநாள் கனவுகளையும்
சேர்த்தே எரித்துப் புகைக்கிறாய்...

பற்ற வைக்கும் போதெல்லாம்
எட்ட இருக்கும் பட்டாம்பூச்சிகள் எல்லாம்
சிறகுகள் அசைத்துத் துடிக்கிறது...

அந்தக் காற்று
இன்னும் வந்து தொடவில்லையா
உன் மனதை...

உனக்காக இல்லை 
சின்னஞ்சிறு அதற்காக 
நம்பிக் கை விரல்களில் இருப்பதைப் போடு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக