புதன், 19 ஆகஸ்ட், 2020


ஒரு குழந்தையின் பார்வை
நாம் விலகி வந்த தூரத்தை 
அளந்து சொல்கிறது

திரும்பிச் சென்றால்
மீண்டும் குழந்தை ஆகலாம்
இதயம் சொல்கிறது

கேட்காமல் திரிகிறது மனது
கேட்டுக் கேட்டு வளர்கிறது உடம்பு
விலகி விலகி ஒருநாழிகை மறைந்து  போகுது

வாழப் பிறந்த உயிர்களிலே
பிழைத்துப் பெருகும் மனிதர்கள் நாம்
மீண்டு குழந்தையானால் வாழலாம்

நிறைவான தருணங்களில்
குழந்தை ஆன சமயங்களை
நித்தம் கடந்து செல்கிறோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக