நாம் விலகி வந்த தூரத்தை
அளந்து சொல்கிறது
திரும்பிச் சென்றால்
மீண்டும் குழந்தை ஆகலாம்
இதயம் சொல்கிறது
கேட்காமல் திரிகிறது மனது
கேட்டுக் கேட்டு வளர்கிறது உடம்பு
விலகி விலகி ஒருநாழிகை மறைந்து போகுது
வாழப் பிறந்த உயிர்களிலே
பிழைத்துப் பெருகும் மனிதர்கள் நாம்
மீண்டு குழந்தையானால் வாழலாம்
நிறைவான தருணங்களில்
குழந்தை ஆன சமயங்களை
நித்தம் கடந்து செல்கிறோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக