சனி, 1 ஆகஸ்ட், 2020




ஒரு மாட்டுக் கறி
நூறு ஆடுகளையும்
பல நூறு கோழிகளையும்
ஆயிரம் மீன்களையும்
பல்லாயிரம் தாவரங்களையும்
அதை உண்ணும் எங்களையும்
உயிர்க் காக்கிறது
கொலைகாரர்கள் எங்களுக்கும்
மாடு குல சாமி தான்...

விவசாய பூமியாய் மாற்றுங்கள்
விண் ஞானம் தேவையில்லை
மண் ஞானம் வளருங்கள்
மோடி வித்தைகளை நிறுத்துங்கள்
பாடி விதைகளை விதையுங்கள்
வித்தெல்லாம் விருட்சமானால் 
மற்றெல்லாம் மாறிவிடும்
மாறாமல் மாரி வரும்
மாடெல்லாம் வீடு வரும்
மனதெல்லாம் மகிழ்ச்சி வரும்
கூடி வாழ உதவி செய்தால்
நாடி உனைத் தேடி வரும் பதவி 
மாடி வீட்டு மனிதர்களுக்கா
நீ பிறந்த இப் பிறவி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக