மரண வீட்டில்
மௌனப் பேச்சுகள் சொன்னது
அவன் யாரென்று...
மாமனிதனைப் பற்றி
கூடியிருந்தவர்கள் பேசுவதற்கில்லை
கூடியிருந்தும் கூட யாருமில்லை
கூடவே முடியாத உன்னைத் தவிர
உச்சம் தொட்ட கலைஞன்
மிச்சம் தேடிப் போனாயோ
பேரிசை மௌனம்
நீ துவங்கி விட்டாய்
அதைப் பாடும் பயணம்
மூச்சு விடாமல் பாடுவது
உனக்கு பழக்கமானது தான்
வார்த்தைகளையும் விட்டுவிட்டாய்
உமக்கு சுலபமானது தான்
ஞானசூன்யம் நான்
பேரிசையை உணர்தல்
எனக்கு கடினமானது தான்
எனினும்
ஞானி நீ
இனி சூன்யமும் நீ
என்னை நிறைக்கப்போவது நீதான்
ஆதலால் உணர்வேன்
உனைத் தொடுவேன்
யுகம் பல கடந்தாலும்
ஜகம் உனை மறவாது
உன்
உடல் உயிரைப் பிரிந்தாலும்
குரல் உயிரை இழக்காது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக