சனி, 19 செப்டம்பர், 2020


பருவ மங்கை 
பாதத்தில்
முள் குத்தியது 

அவள் கத்தியது
என் நெஞ்சத்தைத்
தைத்தது 

மண்ணில் கலந்தது
சிறு துளி உதிரமும்
என்னில் நிறைந்தது
கடலெனக் காமமும்...

அவளின்
'ஆ' என்ற சப்தம் கூட
எனை 
ஆகாயம் வரை 
தூக்கிச்செல்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக