திங்கள், 14 செப்டம்பர், 2020

 


மனதிலே பூ பூக்கும் போது
எங்கிருந்து வருகிறதோ 
இத்தனைச் சிட்டுக்குருவிகள்...

மனதிலே சிட்டுக்குருவிகள் சிறகசைத்தால்
வானிலே சிறகின்றி பறக்க முடிகிறது

கீச்சிட்டு அழைக்கிறது
எங்கேயோ கூட்டிச் செல்ல 
எல்லை தாண்டும் போது
தொல்லை செய்கிறது ஏதோ...

பூக்கள் மறைகிறது
சிட்டுக்குருவிகள் கலைகிறது
நான் மட்டும் இருக்கிறது
நடுவானில் தவிக்கிறது...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக