திருடன் என
என்னில் ஒரு அங்கம் தானே
விரலைப் போல
இதழைப் போல
செவியைப் போல
விழியைப் போல
இதயம் போல
இன்னமும் பல போல...
அன்னையிடம் திருடாத
அண்ணனிடம் திருடாத
தந்தையிடம் திருடாத
தங்கையிடம் திருடாத
நண்பனிடம் திருடாத
பொதுவுடைமை திருடாத
மனிதன் நீ என்றால் சொல்
சொல்லமுடியாது...
அப்படி ஒருவன் நீ என்றால்
நான் சொன்னது புரியாது...
நல்லவன் என்று
ஒருவன் இல்லை
கெட்டவன் என்று
ஒருவன் இல்லை
எல்லோரும் எல்லாமும்
கலந்த கலவை
உலகமே
பொது ஒன்றின் பிளவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக