அவள் முகம் கண்டால்
மழலையாகித் தவழ்கின்றேன்
விண்ணில்
அவள் முகம் கண்டால்
சிறு பிள்ளையாகிக் குதிக்கின்றேன்
பூவில்
அவள் முகம் கண்டால்
வண்டாய் மாறிப் பறக்கின்றேன்
தீயில்
அவள் முகம் கண்டால்
நாவில் கொஞ்சம் ருசிக்கின்றேன்
இசையில்
அவள் முகம் கண்டால்
இதயத்தில் சேர்க்கின்றேன்
கண்ணில்
அவள் முகம் கண்டால்
இமைகள் மூடி அணைக்கின்றேன்
நிலவில்
அவள் முகம் கண்டால்
மேகம் ஆகி தொடுகின்றேன்
நதியில்
அவள் முகம் கண்டால்
நீந்த மாட்டேன் மூழ்கிடுவேன்
உன்னில்
அவள் முகம் கண்டால்
உனக்கும் முத்தம் கொடுத்திடுவேன்
என்னில்
அவள் முகம் காண்பதாலே
இன்னும் உயிர் வாழ்கின்றேன்
உலகில்
அவள் முகம் அன்றி
வேறு ஏது யாமறிவேன்
நினைவில்
அவள் முகம் மறைந்தால்
நொடியில் உலகை நீங்கிடுவேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக