எவ்வளவு இனிமையானதென்று
யாருக்குத் தெரியும்...
எருமை மீது படுத்திருக்கும்
இந்தச் சிறுவனுக்கு தெரிந்திருக்கலாம்
நாம் சொல்வதைக் கேட்கும்
கடவுளிடம் கேட்டுப் பழகிவிட்டதனால்
இவன் சொல்லிக் கேட்க
ஏனோ மனத் தயக்கம்...
கிருஷ்ணனாகவோ அல்லாஹாகவோ இயேசுவாகவோ கூட
அவன் இருக்கலாம்
நாம்தான்
கண்ணுக்குத் தெரியாததை நம்புகிறோம்
தெரிவதை எல்லாம் நம்ப மறுக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக