திங்கள், 28 செப்டம்பர், 2020

 


இரவு வெகுநேரம் 
கதவைத் தட்டியும்
திறக்கவேயில்லை

காலை
கதவைத் திறந்து பார்த்தேன்
வெளியே
மௌனமாக படுத்துக் கிடக்கிறது
மழை

இரவெல்லாம்
விழித்திருந்தும்
நினைவென்று இருந்துவிட்டேன்

மனமுருகி
மண்டியிட்டேன்
காத்திருக்கும்
உன் ஈர உதடுகள்
என்னை விழுங்க திறக்கின்றன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக