ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

 


வானத்தில்
என் கண்களைப்
புதைத்துவிட்டேன் 
இங்கு
பெய்து கொண்டிருப்பது
மழையல்ல...

கரிக்காததால்
இது 
கண்ணீர் அல்ல
என்றால்
இல்லையில்லை
இனிப்பானது 
அவள் நினைவுகள்...

ஈரம் இல்லாத
நீர்த் துளிகள்
காரணம்
சூடான
என் ஆசைகள்...

விழுந்த
துளிகளை எல்லாம்
இதயத்தால்
உறிஞ்சி எடுக்கிறேன்
அது
துடியாய்த் துடிக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக