செவ்வாய், 22 செப்டம்பர், 2020

சில்க்ஸ்மிதா

 


உன்னைப் போலவே
உன் பெயரும்
ஆடை தாண்டி
கவர்ந்து இழுக்கிறது

உன்னை மட்டுமல்ல
உன் பெயரைக் கூட
ஆடை கவர்ச்சியுடன் 
அணைத்து இருக்கிறது 

கம்பன் எழுதாத
அழகை எல்லாம்
உன் அங்கம் எழுதியது
நானும் படித்தேன்

கண்ணதாசன் எழுதாத
வர்ணனைகள்
உன் கன்னக் குழி முழுதும்
அந்தக் கற்பனைகள்

விண்ணை அலங்கரிக்க 
உன்னை ஏன் கொடுத்தாய்
கண்ணடிக்கும் வின்மீனே 
வானில் மின்னுவதெல்லாம் நீதானே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக