உன் பெயரும்
ஆடை தாண்டி
கவர்ந்து இழுக்கிறது
உன்னை மட்டுமல்ல
உன் பெயரைக் கூட
ஆடை கவர்ச்சியுடன்
அணைத்து இருக்கிறது
கம்பன் எழுதாத
அழகை எல்லாம்
உன் அங்கம் எழுதியது
நானும் படித்தேன்
கண்ணதாசன் எழுதாத
வர்ணனைகள்
உன் கன்னக் குழி முழுதும்
அந்தக் கற்பனைகள்
விண்ணை அலங்கரிக்க
உன்னை ஏன் கொடுத்தாய்
கண்ணடிக்கும் வின்மீனே
வானில் மின்னுவதெல்லாம் நீதானே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக