நீ
திரும்பிப் பார்த்தது
குற்றமா...
நீ
திரும்பியதும்
நான் பார்த்தது
குற்றமா...
நீ
திரும்பிப்
போய்விட்ட போதும்
நான்
திரும்பாமல்
பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
நீ
திரும்பி
வருவாய் என...
இதுதான்
குற்றம் என்றால்
திரும்பத் திரும்பச் செய்வேன்
இதுவே
எனக்கு தண்டனையும் கூட...
இதற்காக
வருந்தும் சிலர்
குற்றம் செய்யாதவர்கள்
என்றால்
என்னால்
நம்ப முடியவில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக