எங்கோ இருந்து இயக்குகிறாய்
இங்கே என்னை வருத்துகிறாய்
கண்கள் தாண்டி மனதிற்குள்
எப்படி மாயமாக நுழைகின்றாய்
அரவம் போல படுக்கின்றாய்
அடிக்கடி ஏனோ கடிக்கின்றாய்
உச்சந்தலையில் விஷத்தை ஏற்றி
வலியாய் முழுதும் நிறைகின்றாய்
சவமாய் மாற்றிக் கிடத்துகிறாய்
மௌனச் சங்கை ஊதுகிறாய்
காலக் கால்களை ஊனமாக்கி
மெல்ல மெல்ல நகர்த்துகிறாய்
ஏனோ நாடகம் நடத்துகிறாய்
எதற்குப் பாடாய்ப் படுத்துகிறாய்
நின்னைக் கேள்விகள் கேட்கின்றேன்
துயில் கலைந்து மறைகின்றாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக