பறவையாய் வாழ்வோம்
மரண வீட்டில்
மௌனப் பேச்சுகள் சொன்னது
அவன் யாரென்று...
மாமனிதனைப் பற்றி
கூடியிருந்தவர்கள் பேசுவதற்கில்லை
கூடியிருந்தும் கூட யாருமில்லை
கூடவே முடியாத உன்னைத் தவிர
உச்சம் தொட்ட கலைஞன்
மிச்சம் தேடிப் போனாயோ
பேரிசை மௌனம்
நீ துவங்கி விட்டாய்
அதைப் பாடும் பயணம்
மூச்சு விடாமல் பாடுவது
உனக்கு பழக்கமானது தான்
வார்த்தைகளையும் விட்டுவிட்டாய்
உமக்கு சுலபமானது தான்
ஞானசூன்யம் நான்
பேரிசையை உணர்தல்
எனக்கு கடினமானது தான்
எனினும்
ஞானி நீ
இனி சூன்யமும் நீ
என்னை நிறைக்கப்போவது நீதான்
ஆதலால் உணர்வேன்
உனைத் தொடுவேன்
யுகம் பல கடந்தாலும்
ஜகம் உனை மறவாது
உன்
உடல் உயிரைப் பிரிந்தாலும்
குரல் உயிரை இழக்காது...
கடலின் விளிம்புகளில்
வானம் தொடங்குவதைப் போல
மலரின் விளிம்புகளில்
வாசம் தொடங்குவதைப் போல
தீயின் விளிம்புகளில்
வெளிச்சம் தொடங்குவதைப் போல
இலையின் விளிம்புகளில்
காற்று தொடங்குவதைப் போல
இசையின் விளிம்புகளில்
மௌனம் தொடங்குவதைப் போல
பார்வை விளிம்புகளில்
வெறுமை தொடங்குவதைப் போல
என்னின் விளிம்புகளில்
தொடங்குவது எல்லாம் நீ...
நீ மாறினாலும்
நான் மாறினாலும்
இயற்கை மாறப்போவதில்லை
நீ
திரும்பிப் பார்த்தது
குற்றமா...
நீ
திரும்பியதும்
நான் பார்த்தது
குற்றமா...
நீ
திரும்பிப்
போய்விட்ட போதும்
நான்
திரும்பாமல்
பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
நீ
திரும்பி
வருவாய் என...
இதுதான்
குற்றம் என்றால்
திரும்பத் திரும்பச் செய்வேன்
இதுவே
எனக்கு தண்டனையும் கூட...
இதற்காக
வருந்தும் சிலர்
குற்றம் செய்யாதவர்கள்
என்றால்
என்னால்
நம்ப முடியவில்லை...
எங்கோ இருந்து இயக்குகிறாய்
இங்கே என்னை வருத்துகிறாய்
கண்கள் தாண்டி மனதிற்குள்
எப்படி மாயமாக நுழைகின்றாய்
அரவம் போல படுக்கின்றாய்
அடிக்கடி ஏனோ கடிக்கின்றாய்
உச்சந்தலையில் விஷத்தை ஏற்றி
வலியாய் முழுதும் நிறைகின்றாய்
சவமாய் மாற்றிக் கிடத்துகிறாய்
மௌனச் சங்கை ஊதுகிறாய்
காலக் கால்களை ஊனமாக்கி
மெல்ல மெல்ல நகர்த்துகிறாய்
ஏனோ நாடகம் நடத்துகிறாய்
எதற்குப் பாடாய்ப் படுத்துகிறாய்
நின்னைக் கேள்விகள் கேட்கின்றேன்
துயில் கலைந்து மறைகின்றாய்...
சிறகுகள் ஓய்ந்ததும்