செவ்வாய், 12 மே, 2020

"ஜெயஸ்ரீ எரித்துக் கொலை"

அன்பின் இன்றைய நிலைப்பாடு
ஆங்காங்கே பற்றி எரிகிறது

மனிதம் கெட்டுப் போகுமிடம்
தேசத் தலைவன் யாரும்
சிந்திப்பதற்கு இல்லை

அரசியல் ஆதாயம் ஏதுமின்றி
அவர்கள் நாற்காலியை
விட்டுப் பிரிவதில்லை

நீயும் நானும் கூட
என்ன செய்துவிட்டோம்
பாழ்பட்டுப் போன மனம் தான்
எல்லோர்க்கும் இருக்குது இங்கே

கண்ணுக்குத் தெரியாத
கிருமிகளுக்கு எல்லாம்
மருந்து காணும்
அறிவியல் யுகம்

பூமிப் பானைச் சோற்றுக்கு
எரித்த இரு பாதகர் பதம்

உலகமே ஒரு நாடக மேடை
இருப்பினும்
இறந்தவர் யாரும் மீள்வதில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக