சனி, 23 மே, 2020

நீ
படித்து வியக்காத வார்த்தைகளை
மீண்டும் மீண்டும்
நான் வாசித்து
வியந்து கொண்டே இருக்கிறேன்

என்னை ஸ்பரிசிக்கும் தருணத்தில்
நீ மொத்தமாக வியப்பாய்
என் கனவுகளில்
அதை நான் காண்கிறேன்...

அலைகள் கால்களை
நனைப்பதைப் போல...

நிலவொளி இருளிலே
தொடுவதைப் போல...

மலர்களின் வாசனை
சூழ்வதைப் போல...

இசையின் இனிமை
நுழைவதைப் போல...

தனிமையில் மௌனம்
அணைப்பதைப் போல...

தாகத்தை நீர்
தணிப்பதைப் போல...

என்னை ஸ்பரிசிக்கும் தருணத்தில்
நீ மொத்தமாக வியப்பாய்
என் கனவுகளில்
அதை நான் காண்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக