உருவமில்லாமல் அனைத்துமாகிறாய்
இதயங்களின் இயக்கமாகிறாய்
மழையும் காற்றும் உன் கருணை
நிலமும் வானும் உன் கருணை
தீயும் நீயும் தான் கருணை
நின்னை நினைக்கும் தருணம்
உடன் பிறக்கும் கருணை
கடலும் கருணை அலையும் கருணை
மரமும் செடியும் கொடியும் கருணை
மூன்றாம் பிறையின் வடிவும் கருணை
முழுதாய்த் தெரியும் நிலவும் கருணை
முக்காலமும் திக்கெட்டும் கருணை
உடல் மன ஆன்ம நலமும் கருணை
கருணை ஒன்றே கடவுள்
சமயத்திற்கு சமயம் மாறுவதில்லை
இயேசுவே...
கிருஷ்ணா...
அல்லா...
என்று அழைக்கும்போதெல்லாம்
நிறைந்து வழிவது கருணை தான்
கருணை ஒன்றே கடவுள்
இந்த ஈகைத் திருநாளில்
கருணை நிறைத்திடுவோம்
கரங்கள் கோர்த்திடுவோம்
மனிதம் போற்றிடுவோம்
இதயங்களின் இயக்கமாகிறாய்
மழையும் காற்றும் உன் கருணை
நிலமும் வானும் உன் கருணை
தீயும் நீயும் தான் கருணை
நின்னை நினைக்கும் தருணம்
உடன் பிறக்கும் கருணை
கடலும் கருணை அலையும் கருணை
மரமும் செடியும் கொடியும் கருணை
மூன்றாம் பிறையின் வடிவும் கருணை
முழுதாய்த் தெரியும் நிலவும் கருணை
முக்காலமும் திக்கெட்டும் கருணை
உடல் மன ஆன்ம நலமும் கருணை
கருணை ஒன்றே கடவுள்
சமயத்திற்கு சமயம் மாறுவதில்லை
இயேசுவே...
கிருஷ்ணா...
அல்லா...
என்று அழைக்கும்போதெல்லாம்
நிறைந்து வழிவது கருணை தான்
கருணை ஒன்றே கடவுள்
இந்த ஈகைத் திருநாளில்
கருணை நிறைத்திடுவோம்
கரங்கள் கோர்த்திடுவோம்
மனிதம் போற்றிடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக