திங்கள், 11 மே, 2020

ஒற்றைப் பூ
உன் கரங்களில் கொடுக்கும் வரை
என் கரங்களில் கனக்கிறது

பார்வையில் படும்போதே
பாரத்தைக் கிள்ளி எறிகிறாய்

நீ
பக்கம் வரவர
கண்களும் பூவும்
மேலும் மலர்கிறது

பற்றி எரியும்
இதய எரிமலையை
இதழ்களில் அணைத்துவிடு

நாளையும்
அதிலொரு பூ
உனக்காகப் பூக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக