புதன், 27 மே, 2020

கருவறை விட்டு
வெளிவந்த அம்மனாக
காட்சி அளிக்கிறாள்
ஒரு குட்டி தேவதை
நினைக்க நினைக்க
விஸ்வரூபம் எடுக்கிறாள்
என் சிறுவயதுத் தோழியை
நினைவு கூர்கிறாள்
நெருக்கம் ஆகிறாள்
நெகிழ வைக்கிறாள்
இறுக்கம் யாவையும்
தளரச் செய்கிறாள்

வெளியே உள்ள கடவுளை
குழந்தைகளைக் காணும்போதும்
உள்ளே உள்ள கடவுளை
குழந்தையாக மாறும்போதும்
காண முடிகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக