சனி, 2 மே, 2020

காலனி இல்லாமல்
நடக்காதவர்களுக்கு
பாதங்களின் வேதனை புரியாது

பிறக்கும் போது
இருக்கும் பாதம்
இறக்கும் போது
இருக்காது

நிழலைத் தேடி
அலையும் பாதங்கள் தான்
சுடும் மணலுக்கு நட்பாகும்

நிழலில் சில நேரம்
முட்கள்
காத்திருந்து முத்தமிடும்

காத்திருந்த பரிதவிப்பில்
பல் பதித்து
இரத்தம் தரும்

வறுமை கூட
விதவிதமாய்
பந்தங்களைத் தருகின்றன

மண் இட்டு
மூடிமறைத்தால்
முள்ளே
முத்தம் தருவாயா...


கொள்ளி இட்டு
எனைச் சுடும் போது
சுடு மணலே
நினைவில் வந்தணைப்பாயா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக