பட்டாம்பூச்சிகளின் சிறகசைப்பைப் போலவே
குழந்தைகளின் உடலசைவும்
எதையோ தேடித்தேடி நகர்கிறது...
தொட்டு விளையாடும்
மலர்களை
மர்மங்களை
நாம் தேடும் கடவுளை...
நிச்சயம் நமக்கு
அது கிடைக்காது
மீண்டும்
குழந்தைப் பருவமும் திரும்பாது
முடிந்தால்
திரும்பிப் பார் குழந்தைகளை
நீ இழந்தது
ஒருவேளை தென்படலாம்...
குழந்தைகளின் உடலசைவும்
எதையோ தேடித்தேடி நகர்கிறது...
தொட்டு விளையாடும்
மலர்களை
மர்மங்களை
நாம் தேடும் கடவுளை...
நிச்சயம் நமக்கு
அது கிடைக்காது
மீண்டும்
குழந்தைப் பருவமும் திரும்பாது
முடிந்தால்
திரும்பிப் பார் குழந்தைகளை
நீ இழந்தது
ஒருவேளை தென்படலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக