சனி, 30 மே, 2020


தினம் பூக்கும்
நாழிகை மலர்களை
யாரும் ஏற்பதில்லை...

என்றோ 
பதிந்த ஒற்றை மலருடன்
நாளும் வாடுகின்றார்

மலர்தலை
நறுமணத்தை
விரும்பாமல் ஏனோ
தனித்து விடுகின்றார்

நிகழ்காலச்சோலையில் அமர்ந்து
கடந்தகாலப் பாலையை
கனவு காண்கின்றார்

தேனீக்களும்
தேன்சிட்டுகளும்
இந்த நிமிடத்தை
கொண்டாடுவதால் தான்
நிகழ்காலம்
இன்னும் இறவாமல்
தொடர்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக