வெள்ளி, 29 மே, 2020



புத்தகங்களில் 
வார்த்தைகளை முடித்து வைக்கும்
முற்றுப் புள்ளிகள் தான்
வானத்தில்
வார்த்தைகளைத் துவங்கி வைக்கிறது

புத்தகங்களின் முற்றுப் புள்ளிகளில்
இருள் புதைந்து கிடக்கிறது
வானத்தின் முற்றுப் புள்ளிகளில்
ஒளி படர்ந்து ஜொலிக்கிறது

எழுதிய எழுதாத வார்த்தைகளின்
புள்ளிகள் நிறைந்த பூமகள்
புதிராகவே பூத்திருக்கிறாள்

ஒருவரும் பார்க்க இயலாதப் புள்ளி
அவரவர் வாழ்க்கையின் முற்றுப்புள்ளி
முடித்து வைக்கிறதா... 
துவங்கி வைக்கிறதா... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக