ஞாயிறு, 17 மே, 2020

மாலை வேலையில் சூரியன்
குளத்தில் முகம் கழுவி
காத்திருக்கிறான்...

நிலவு வருகிறாள்
விண்மீன் தோழிகளுடன்
எப்போதும் போல தாமதமாக...

இருவர் காதலை
யாரறிவார்
இருளும் அறியாது
ஒளியும் அறியாது

அவன் காத்திருந்து
கண் சிவந்து
போகவில்லை

அவள் கண்ணீர் தான்
அவன் கண் கலந்த
காரணமோ...

மேகப் போர்வைக்குள்
இடி முழக்கம்
முத்தமாகத்தான் இருக்கும்
மின்னல் மின்சாரம் பாய்கின்றதே

ஆனந்த மழை
வந்து நனைக்கின்றது
மோகத்தில் உயிரெல்லாம்
துடிக்கின்றது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக