திங்கள், 18 மே, 2020

உபதேசம் செய்கின்றான் ஒருவன்
கண்ணுக்குத் தெரியாமல்

எதைச் செய்யும் முன்னும்
சில ஆலோசனை
நான் கேட்கவில்லை என்றாலும்
செவிகள் கேட்டு விடுகிறது

எய்த அம்பில்
உண்மை சாய்ந்தால் மட்டும்
ஊமை ஆகிறோம் இருவரும்

தேர் இல்லாது போனாலும்
தேரோட்டியாய் மாயவன்
போர் செய்திட உதவுகிறான்

கண் துயிலக் காணும் கனவும்
கண் திறந்தே செய்திடும் கற்பனையும்
கடவுள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக