செவ்வாய், 12 மே, 2020

குழந்தை
வளர வளர
குழந்தை மனம்
காணமல் போகிறது

காமம்
வளர வளர
நாணம் காணமல் போகிறது

காதல்
வளர வளர
காதலர்கள் காணமல் போகின்றனர்...

வெறுமையில் தான்
பிறப்பு நிகழ்கிறது

வெறுமை ஈன்றெடுத்த
உலகக் குழந்தை
சுற்றிச்சுற்றி விளையாடுது
அதில்
இருவர் ஈன்றெடுக்கும்
குழந்தைகள் எல்லாம்
கல்வி கற்று விலை போகுது

அறிவு
வளர வளர
கருணை காணமல் போகிறது

கருணையைத் தொலைத்து விட்டு
கடவுளைத் தேடுகிறேன்
கடவுள்
வளர வளர
மனிதம் காணாமல் போகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக