வார்த்தைகளை முடித்து வைக்கும்
முற்றுப் புள்ளிகள் தான்
வானத்தில்
வார்த்தைகளைத் துவங்கி வைக்கிறது
புத்தகங்களின் முற்றுப் புள்ளிகளில்
இருள் புதைந்து கிடக்கிறது
வானத்தின் முற்றுப் புள்ளிகளில்
ஒளி படர்ந்து ஜொலிக்கிறது
எழுதிய எழுதாத வார்த்தைகளின்
புள்ளிகள் நிறைந்த பூமகள்
புதிராகவே பூத்திருக்கிறாள்
ஒருவரும் பார்க்க இயலாதப் புள்ளி
அவரவர் வாழ்க்கையின் முற்றுப்புள்ளி
முடித்து வைக்கிறதா...
துவங்கி வைக்கிறதா...