ஞாயிறு, 28 ஜூன், 2020



சோப்பு கூட கடவுள் தான்
நம்மைக் காப்பாற்றிக் கரைந்து கரைந்து
கண் மறைந்து போகிறது

இருகரங்கள் கூப்பிக் கழுவுகிறோம்
கிருமி சாக வேண்டுகிறோம்
வரம் கொடுக்கும் சாமிகளை
பணம் கொடுத்தே வாங்குகிறோம்

இறைவன் தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
மளிகை கடையிலும் கிடைப்பான்
குளியல் அறையிலும் கிடப்பான்

கூரை வீட்டில் குலதெய்வம்
மாடி வீட்டில் அயல் தெய்வம்
தெய்வம் மறுக்கும் நாத்திகரும் உண்டு

கடவுள்
கண்ணுக்குத் தெரியத் துவங்கிவிட்டார்
மனிதரைத் தான் காணவில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக