நான் சந்தித்த முதல் பித்தன்
என்னை ஈன்றெடுத்த என் அப்பன்
நான் பிறந்த நாளிலிருந்தே
என்னைக் கொண்டாடியவன்
அவன் பிறந்தநாளில்
அவன் இன்றி ஏது கொண்டாட்டம்...
என்றெல்லாம் ஒருபோதும் கிடையாது
என்றென்றும் கொண்டாட்டம்
எவர் இன்றியும்
அதைக்காண்பதே வாழ்க்கை
என்று பாடம் சொன்னவன்
எதிர்கால இருளில்
எதிர்பார்ப்பின்றி நுழைபவன்
இருளோ பகலோ பேதமின்றி ரசிப்பவன்
பிறருக்காக வாழ்ந்த தலைவரை எல்லாம்
குறைவாகவே படித்திருக்கிறேன்
அப்படியே வாழ்ந்த அந்த பித்தனோடுதான்
நானும் வாழ்ந்திருக்கிறேன்
தனக்காக மட்டும் இல்லை
தன் குடும்பத்திற்காக வாழ்வதையும்
சுயநலமாகக் கருதியவன்
இந்த வாழ்வில்
எனைப் பெற்ற அவர் பாக்கியம்
நான் பெற்ற பெரும் பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக