சனி, 20 ஜூன், 2020



மலை ஆடுகளை
மதில் பூனைகளை
திரையிட்டு மறைத்துவிட்டேன்
பறவை பார்க்க மறந்துவிட்டேன்
வானம் பார்த்து கண் மறைத்தேன்
உயரப் போகத் துடிக்கின்றேன்
உல்லாச ஊர்தியில் பறக்கின்றேன்
எங்கு சென்று சேர்ந்தாலும்
நான்கு சுவர்களுக்குள் இருக்கின்றேன்
என்னை நானே கைது செய்ய
எப்போதும் விளைகின்றேன்
விளங்கிடும் நாள் வருமோ
விலங்குகள் உடைபடுமோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக